பொங்கல் பண்டிகை நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்துள்ள துணிவு படமும் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களுமே கடந்த ஜனவரி 11-ந் தேதி ரிலீஸ் ஆனது. பொதுவாக அஜித் - விஜய் படங்கள் ரிலீஸ் ஆனால் எந்த படத்துக்கு அதிக கலெக்ஷன் கிடைத்தது என்பதை தெரிந்துகொள்ள இருதரப்பு ரசிகர்களும் ஆர்வம் காட்டுவது வழக்கம்.
காணும் பொங்கல் தினமான நேற்று அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் உலகளவில் ரூ.11 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இதன்மூலம் கடந்த 7 நாட்களில் இப்படம் மொத்தமாக ரூ.175 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக அஜித் படங்களுக்கு வெளிநாட்டில் பெரிதாக வரவேற்பு இருக்காது என்பதை துணிவு படம் தகர்த்தெறிந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் என பல்வேறு நாடுகளில் அஜித்தின் கெரியரில் அதிக கலெக்ஷனை குவித்த படமாக துணிவு மாறி உள்ளது.
மறுபுறம் விஜய்யின் வாரிசு திரைப்படம் நேற்று மட்டும் ரூ.17 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை இப்படம் மொத்தமாக ரூ.190 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளதாம். விரைவில் 200 கோடி கிளப்பிலும் இணைய வாய்ப்புள்ளது. வெளிநாட்டிலும் வாரிசு திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. நேற்றுடன் பொங்கல் விடுமுறை முடிந்துவிட்டதால், இன்று துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களின் வசூலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஆவலோடு காத்திருந்த அமுதவாணன்.. அலேக்காக பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறிய கதிரவன்- பிக்பாஸில் செம டுவிஸ்ட்