சென்னையின் ஆவடியில் பிறந்தவர் தான் பா.ரஞ்சித். கல்லூரி படிக்கும் போதே சினிமாவின் மீது இருந்த ஆசையால், இயக்குனர் லிங்குசாமி, வெங்கட் பிரபு ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் 2012-ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.