அப்போது பஞ்சு அருணாச்சலம் “ உன் மார்க்கெட் நிலவரம் உனக்கு தெரியாதா? வெளியே உன் படத்தை விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி லாபம் பார்க்கின்றனர். உனக்கு யாரும் சொல்லவில்லையா? உனக்கு ரூ.1 லட்சம் சம்பளம். இல்லை 1 லட்சம் ராசியாக இருக்காது. ரூ.1,10,000 சம்பளம் என்று கூறியுள்ளார். அதன்படி பிரியா படத்திற்கு தான் ரஜினி முதன்முதலில் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கி உள்ளார். இப்படி தான் அவரின் சம்பளம் படிப்படியாக உயர்ந்து. இன்று அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறி உள்ளார்.