சினிமா டிக்கெட் விலை உயர்வு உட்பட 5 கோரிக்கைகளை முதல்வருக்கு வைத்த திரையரங்கு உரிமையாளர்கள!

Published : Oct 20, 2022, 05:33 PM IST

திரையரங்கு உரிமையாளர்கள் 5 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என முதல்வருக்கு கடிதம் எழுதியள்ளனர்.   

PREV
15
சினிமா டிக்கெட் விலை உயர்வு உட்பட 5 கோரிக்கைகளை முதல்வருக்கு வைத்த திரையரங்கு உரிமையாளர்கள!

இதில் கூறப்பட்டுள்ளதாவது... எங்கள் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக கீழே கண்ட கோரிக்கைகளை சமர்ப்பிக்கிறோம்.

தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு,  திரையரங்குகளில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, ஊழியர்களின் சம்பள உயர்வு, மற்றும் பராமரிப்பு செலவு உயர்வு, காரணமாக திரையரங்குகள் நடத்த முடியாத சூழல் உள்ளதால், தற்போதுள்ள பராமரிப்பு கட்டணத்தை ஏசி தியேட்டருக்கு ரூபாய் 4 இருந்து ரூபாய் 10 ஆகவும், Non ஏசி தியேட்டருக்கு ரூபாய் 2 இருந்து ரூ.5 உயர்த்தி தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
 

25

வருடத்திற்கு ஒரு முறை 'C ' படிவ உரிமம் புதுப்பிக்கும் முறையில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, அந்த முறையில் மாற்றம் செய்து மூன்று வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கும் படி அரசாணை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். வருடத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து அப்போது உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள விழைகிறோம்.

மேலும் செய்திகள்: Nayanthara Salary 'God Father' படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா? வெளியான தகவல்!
 

35

சிறிய திரைப்படங்கள் வெளியாக திரையரங்குகள் கிடைப்பது சிரமமாக இருப்பதால், பெரிய திரையரங்குகளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திரையரங்குகளாக மாற்றிக்கொள்ள pwd மூலம் சான்றிதழ் பெற்றால், முன்போல் அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் சிறு முதலீட்டு படங்கள் வெளிவர மிக வசதியாக இருக்கும் என அரசுக்கு தெரிவிக்கிறோம்.

45

திரைப்படக்கருவி  இயக்குபவர்களுக்கான தேர்வு நீண்ட காலமாக நடத்தப்படாததால், திரைப்படக் கருவி இயக்குபவர்கள் பற்றாக்குறை உள்ளதால், புதிய திரைப்படக் கருதி இயக்குபவர்களை தேர்வு செய்ய ஒரு சட்டம் இயற்றி நிறைய திரைப்படக் கருவி இயக்குபவர்களை தேர்வு செய்து வேலைவாய்ப்பை உருவாக்கி தரும்படி அரசை கேட்டுக்கொள்கிறோம். அல்லது திரைப்படக் கருவி இயக்குபவர்கள் நியமனம் குறித்து அரசு விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில், தற்போதுள்ள திரைப்பட கருவி இயக்குபவர்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தாலும், மேலும் தற்போதைய சினிமா படச்சுருள் மூலம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பப்படுவதால் பயிற்சி பெற்ற மின் கம்பியாளரை அதற்கு போதும் என்று அரசு கருதி ஆணையிடலாம்.

மேலும் செய்திகள்: உடலில் டைட்டாக ஒட்டி இருக்கும் கண்ணாடி உடையில்... பளீச் என மின்னும் பூஜா ஹெக்டே..! வைரலாகும் புகைப்படம்!
 

55

மல்டிபிளக்ஸ், மால், சினிமா திரையரங்குகள் மற்றும் ஒன்றை தனித்திறை சினிமாக்களுக்கு EB சம்பளம் மற்ற செலவுகள் ஒரே மாதிரியாக வருவதால், எல்லா திரையரங்குகளுக்கும் சம விகித கட்டணம் நிர்ணயித்து வழங்க வேண்டும் என்றும், அரசை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். மேற்கூறிய கோரிக்கைகளை அரசாணையாக வெளியிட்டு திரையரங்க உரிமையாளர்களை காப்பாற்றுமாறு அரசை வேண்டி கேட்டுக்கொள்கிறோம் என முதல்வருக்கு திரையரங்கு உரிமையாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories