சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உறுதி..! அதிகார பூர்வமாக அறிவித்த நடிகர் கார்த்தி..!

Published : Oct 25, 2022, 10:41 PM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான மூன்று படங்களுமே, அடுத்தடுத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அதிகார பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.  

PREV
14
சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உறுதி..! அதிகார பூர்வமாக அறிவித்த நடிகர் கார்த்தி..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்திக்கு இந்த வருடம் மிகவும் ராசியான வருடம் என்று தான் கூற வேண்டும், இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ ஆகிய படங்கள் பிரமாண்ட வெற்றி பெற்றது மட்டும் இன்றி, திரையரங்கில் நின்று வசூல் வேட்டை செய்தது. சர்தாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, சர்தார் பட வெற்றிவிழா சந்திப்பில் நடிகர் கார்த்தி அறிவித்தார். 
 

24

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான விருமன் படத்தில் கரடுமுரடான தோற்றத்தில் கிராமத்து மனிதனாக மிரட்டியிருந்தார் கார்த்தி. அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் நீண்ட வருட கனவு திரைப்படமாக, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை பாத்திரமான வந்தியதேவன் பாத்திரத்தில், ஒன்றி நடித்து மக்களின் மனம் கவர்ந்தார். 

மேலும் செய்திகள்: தேவலோக ரம்பை போல் மாறிய குட்டி நயன் அனிகா..! கண்ணாடி முன் அமர்ந்து... அழகை வெளிப்படுத்திய அசத்தல் போட்டோஸ்!
 

34

இதைத்தொடர்ந்து தீபாவளி கொண்டாட்டமாக வெளியான 'சர்தார்' படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் உளவாளி கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரது நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டுள்ளார். மாறுபட்ட கதைக்களம், விதவிதமான கதாப்பாத்திரம்  என ஒவ்வொரு படத்திலும் அசத்தி வருகிறார் கார்த்தி. கார்த்தி படம் என்றால் நம்பி தியேட்டர் போகலாம் எனும் கருத்தை மக்கள் மனதில் அழுத்தமாக பதித்து, தனக்கென தனியொரு இடத்தை பிடித்துள்ளார். 
 

44

தீபாவளிக்கு வெளியான 'சர்தார்' படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் உருவாகவுள்ளதாக அறிவித்துள்ளார் கார்த்தி. அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பையடுத்து ரசிகர்கள் இச்செய்தியினை கொண்டாடி வருகின்றனர். 'சர்தார்' பட வெற்றி விழாவில், தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்‌ஷ்மன்,  டைரக்டர் பி.எஸ்.மித்ரன்,  ரெட் ஜயண்ட் செண்பக மூர்த்தி,  இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்,  எடிட்டர் ரூபன்,  கலை இயக்குநர் கதிர், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், வசனகர்த்தா பொன் பார்த்திபன், சிறப்பு ஒப்பனையாளர் பட்டணம் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்: இயக்குனர் பேரரசுக்கு 'கைலாச தர்ம ரட்சகா விருது' கொடுத்த நித்தியானந்தா! ஏன் தெரியுமா?
 

click me!

Recommended Stories