thalaivar 169
அண்ணாத்த படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் ரஜினி தலைவர் 169 படத்தில் இணைத்துள்ளார். சமீபகாலமாக ரஜினியின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் இப்படத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் ரஜினி இறங்கியுள்ளார். இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
thalaivar 169
இந்த படத்தில், ரஜினியுடன் சேர்ந்து ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நெல்சனின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம், எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், தலைவர் 169 படத்தின் மூலம் இயக்குனர் நெல்சன் ஒரு கம்பேக் கொடுப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
thalaivar 169
இருப்பினும் ரஜினி கதையில் சிறு சிறு மாற்றங்கள் செய்து நெல்சனை முழுவதுமாக நம்பி தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார். அதன்படி, இம்மாத இறுதிக்குள் கதை தயாராகிவிடும் என்றும், ஜூலை மாதம் இறுதியில் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிடியில் நடைபெறவுள்ளது.