தமிழ் சினிமாவில் அதிக ரிஸ்க் எடுத்து நடிக்கக் கூடிய நடிகர்கள் வெகு சிலரே, அதில் கில்லாடியாக இருப்பவர் தான் சீயான் விக்ரம். இவரின் ஒரிஜினல் பெயர் கென்னடி. சினிமாவுக்காக தன் பெயரை விக்ரம் என மாற்றிக்கொண்டார். இவரது தாய்மாமா தான் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன், அதாவது நடிகர் பிரசாந்தின் அப்பா. தாய் மாமா சினிமாவில் இருந்தாலும் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விக்ரம் அவரிடம் பேசுவதில்லை.