ஓ உனக்கு இவ்வளவு திமிரா? எம்.ஜி.ஆருக்காக ஊழியரை அசிங்கப்படுத்திய நாகேஷ்! கொட்டத்தை அடக்கிய கே.பாலச்சந்தர்!

First Published Aug 6, 2024, 11:59 AM IST

நடிகர் நாகேஷ் கால் ஷீட் கொடுத்த பின், தன்னுடைய ஊழியரை அசிங்கப்படுத்திவிட்டு எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க சென்ற நிலையில்... அவருக்கு கே.பாலச்சந்தர் புகட்டிய பாடம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
 

திரையுலகம் ஒரு மாயக்கண்ணாடி என்பது அதை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். ஒரே படத்தில் ஓஹோ என பெயரையும், புகழையும் தேடி தரும். ஆனால் அந்த பெயரும் புகழும் நிலையானது அல்ல. சில வருடங்களில் அந்த புகழ் மக்களாலேயே பறிக்கப்படும். காரணம் அந்த இடத்தை பிடிக்க அடுத்தடுத்த கலைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.
 

புகழின் உச்சத்தில் இருந்த போது, நண்பன் என கூட பாராமல் இயக்குனர் கே.பாலச்சந்தரின் படத்திற்கு கால்ஷீட் கொடுத்த நாகேஷ், பின்னர் திமிராக நடந்து கொண்டது பற்றியும் அதற்க்கு பாலச்சந்தர் புகட்டிய பாடம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பிலிம் ஃபேர் விருது விழாவிற்கு பட்டு சேலையில்... தேவதை போல் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ்! போட்டோஸ்!
 

Latest Videos


அதாவது நடிகர் நாகேஷும், இயக்குனர் கே பாலச்சந்தரும்... இயக்குனர் - நடிகர் என்பதை தாண்டி, சிறந்த நண்பர்களாக இருந்தனர். கே.பாலச்சந்தர் 1972-ஆம் ஆண்டு,  நடிகர் ஜெமினி கணேசன், ஜெயந்தி, வாணிஸ்ரீ நடிப்பில் இயக்கிய திரைப்படம் 'வெள்ளிவிழா. இந்த படத்தில் தேங்காய் சீனிவாசன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் நாகேஷ் தானாம். சில காட்சிகளில் நடித்த பின்னர் இவரை கே.பாலச்சந்தர் வெளியேற்ற காரணமே நாகேஷின் ஊழியரை அசிங்கப்படுத்திய சம்பவம் தான்.

ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த இயக்குனர் கே பாலச்சந்தர், நாகேஷ் இல்லாததை பார்த்து புரோடக்ஷன் மேனேஜரிடம், இன்றைய ஷூட்டிங்கிற்கு நாகேஷ் இன்னும் வர வில்லையா? என கேட்டுள்ளார். அவர் தயங்கியபடியே, நான் நாகேஷை அழைத்து வர அவருடைய வீட்டுக்கு நேரில் சென்றேன். அப்போது எம்ஜிஆர் பட இயக்குனரும் அங்கே இருந்தார். ஷூட்டிங்கிற்கு தயாராகி வந்த என்னை பார்த்து, இங்க பாரு என்னை அழைத்து போக எம்ஜிஆர் படத்தை இயக்கும் இயக்குனரே வந்திருக்கிறார் எனக் கூறி நான் யாருடன் செல்ல... என கேட்டபடியே எம்ஜிஆர் பட இயக்குனர் காரில் ஏறி சென்று விட்டாராம்.

அண்ணா சீரியலில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய பிரபலங்கள் வெளியேறுகிறார்களா?
 

இந்த விஷயத்தை புரோடக்ஷன் மேனேஜர் கே பாலச்சந்தரிடம் கூற, அவர் மிகவும் கோபமடைந்து நாகேஷ் என்னையும் அந்த இயக்குனரை போல வீட்டிற்கு வந்து அழைத்து செல்ல சொல்கிறாரா? என கேட்டுவிட்டு இன்று நமக்கு கால்ஷீட் கொடுத்திருக்கும் போது, அவர் அங்கு சென்றுள்ளார். ஒருவேளை அவரால் வர முடியாவிட்டால் அதைக் கூட முறையாக கூறியிருக்க வேண்டும். ஆனால் இந்த அகந்தை நாகேஷுக்கு இருக்கக் கூடாது என எண்ணி, உடனடியாக தேங்காய் சீனிவாசனை அழைத்து இந்த படத்தில் நாகேஷ் நடித்து வந்த வேடத்தில் அவரை நடிக்க வைத்துள்ளார்.

'வெள்ளி விழா' படம் வெற்றி பெற்றது மட்டுமின்றி... தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரமும் விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்தது. அதன் பின்னர் சுமார் மூன்று ஆண்டுகள் நாகேஷ் உடன் கே.பாலச்சந்தர் நாகேஷிடம் பேசவும் இல்லை, அவரை எந்த ஒரு படத்திலும் புக் பண்ணவும் இல்லையாம். பின்னர் நாகேஷ் ஒரு முறை வந்து தன்னுடைய தவறை உணர்ந்து கே பாலச்சந்தரிடம் மன்னிப்பு கேட்க, பாலச்சந்தர் அவருக்கு அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். 

ஆத்தி... பிலிம் ஃபேர் நிகழ்ச்சிக்கு கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த உடை இத்தனை லட்சமா? ஷாக் ஆகிடாதீங்க !

click me!