இந்த சூழலில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் திருவண்ணாமலையில் ஏற்பட்ட திடீர் மண் சரிவினால் புதையுண்டு மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்ட செய்தி கேட்டு நெஞ்சு பதறியது. கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, தங்களுடைய உயிரை பணயம் வைத்து மக்களின் உயிரை காப்பாற்றுகின்ற பேரிடர் மீட்பு மேலாண்மை படையினரின் அர்ப்பணிப்பு மிகப்பெரியது.
ஆனாலும் புயல், வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காலங்களில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு. ஆபத்துகள் அதிகம் உள்ள இடங்களில் பேரிடர் மீட்பு படைகளை தயார் நிலையில் வைத்திருப்பது அவசியமாகும் என்று கூறியிருந்தார்.