இந்த ஆண்டு தொடக்கத்தில் தளபதி விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை அறிமுகம் செய்து வைத்த அதே நேரம், அவருடைய திரையுலக ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கும் வகையில் ஒரு செய்தியை வெளியிட்டார். அதாவது, தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இரு திரைப்பட பணிகளை முடித்த பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், ஆகையால் திரை உலகிற்கு முற்றிலுமாக குட் பை சொல்ல உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படம் வெளியாகி உலக அளவில் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.