பொதுவாகவே பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, ரசிகர்களுக்காக சிறப்பு காட்சி வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் தமிழக அரசின் உரிய அனுமதி பெற்ற பின்னரே... சிறப்பு காட்சி வெளியிடப்படுகிறது. அந்த வகையில் வேட்டையன் படத்தின் சிறப்பு காட்சி வெளியிட, 'வேட்டையன்' பட குழு தமிழக அரசிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்த நிலையில், தற்போது தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி போடப்பட உள்ளது. எனவே நாளை மொத்தம் 5 காட்சிகள் ஒளிபரப்பாகும். தமிழகத்தில் 9-க்கு சிறப்பு காட்சிகள் போடப்பட்டாலும், புதுவை, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் காலை 7 மணிக்கே சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மரண படுக்கையில் இருந்த தங்கை.! கண்ணீருடன் கண்ணதாசன் எழுதிய சூப்பர் ஹிட் பாடல்!