மொக்க படத்தையும் ஹிட் ஆக்க... தமிழ் சினிமாவில் உருவான புது டிரெண்ட்!
சினிமா நிருபர்கள் படத்தை பார்த்தால் படம் பற்றிய உண்மையான விமர்சனங்களைக் கூறிவிடுவார்கள் என்பதால் படக்குழு பாலோ செய்யும் புது ரூட்.
சினிமா நிருபர்கள் படத்தை பார்த்தால் படம் பற்றிய உண்மையான விமர்சனங்களைக் கூறிவிடுவார்கள் என்பதால் படக்குழு பாலோ செய்யும் புது ரூட்.
Tamil Cinema New Trend : சினிமா மூலம் அதில் பணியாற்றும் தொழிலாளர்கள், நடிக்கும் நடிகர், நடிகைகள் மட்டும் தான் முன்பெல்லாம் பயனடைந்து வந்தார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. சினிமா மூலம் சமூக வலைதளத்தில் பேமஸ் ஆக உள்ளவர்களும் லட்சக்கணக்கில் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர். தற்போது ஒரு படத்தை விமர்சனம் செய்ய கூட காசு கேட்கும் சூழல் தான் இங்கு உள்ளது. இதில் தற்போது புது டிரெண்டும் கோலிவுட்டில் உருவாகி இருக்கிறதாம். அது என்ன என்பதை பார்க்கலாம்.
சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. பொதுவாக நிகழ்ச்சி இத்தனை மணிக்கு தொடங்கும் என அறிவிப்பார்கள். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் இருந்து 2 மணி நேரம் தாமதமாகத்தான் நிகழ்ச்சியை தொடங்குவார்கள். இப்போதெல்லாம் படத்தை பற்றி புகழ்ந்து பேச படக்குழுவினர் வருகிறார்களோ இல்லையோ... படத்துக்கு சம்பந்தமே இல்லாத இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் படக்குழுவினரின் நண்பர்கள் என பலர் திரண்டு வருவதால் மேடையை நிறைத்து நாற்காலி போட்டு அமரவைக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் தளபதி உடன் ஒத்தைக்கு ஒத்த மோத ரெடியாகும் சிவகார்த்திகேயன்!
அவர்களும் சம்பந்தப்பட்ட படத்தை பற்றி ஒருவார்த்தை கூட பேசாமல், அவர்களின் பழைய கதைகளை பேசி நேரத்தை வீணடிக்கிறார்கள். அதிலும் சுவாரஸ்யம் என்கிற பெயரில் தேவையில்லாத கேலி கிண்டல்களும், ஆபாச பேச்சுக்களும் சரளமாக வருகிறது. தற்போது புதிதாக இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்கள் என்று ஒரு கும்பல், சுவாரஸ்யமே இல்லாத படங்களைக் கூட சூப்பராக இருக்கிறது என்று கிளப்பிவிடுகிறது. நிருபர்களுக்கு முன்னதாகவே அவர்களுக்கு படம் போட்டுக் காட்டுகின்றனர். காரணம், சினிமா நிருபர்கள் படத்தை பார்த்தால் படம் பற்றிய உண்மையான விமர்சனங்களைக் கூறிவிடுவர். ஆனால் இன்ப்ளூயன்சர்கள் 'கவனிப்பு'க்கு ஏற்றபடி படத்தை ஆஹா ஓஹோ என பாராட்டி தள்ளிவிடுகின்றனர்.
இதுபற்றி மூத்த சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், "தமிழில் ஹிட் கொடுக்கும் படங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 20 படம் வந்தால் அதில் ஒன்று அல்லது இரண்டு தான் வெற்றியடைகின்றன. படம் இயக்குவது கஷ்டம் என்றால், அதை வெளியிடுவது தற்போதெல்லாம் அதை விட பெரும் கஷ்டமாகிவிட்டது. இதனால்தான், இந்த மாதிரி ஆட்களைக் கூப்பிட்டு படம் போட்டுக்காட்டி பாராட்ட வைத்து ஒரே வாரத்தில் போட்ட பணத்தை எடுக்க நினைக்கிறார்கள். இது தமிழ் சினிமாவை எங்கே கொண்டு போய் நிறுத்தப்போகிறதோ தெரியல" என வேதனையுடன் பேசி உள்ளார்.
இதையும் படியுங்கள்... நயன்தாரா தம்பியாக யாஷ் நடிக்கும் டாக்சிக்; அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!