Tamannaah Anxiety speech about heroines in cinema
தமிழ் திரை உலகில் விஜய், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுக்கு நாயகியாக நடித்ததன் மூலம் டாப் 10 இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. வெள்ளாவி வைத்துதான் வெளுத்தார்களா? என்பதைப் போல தங்க நிறத்தில் ஜொலிக்கும் இவர் தற்போது பிற மொழிகளில் பிசியாக இருக்கிறார்.
Tamannaah Anxiety speech about heroines in cinema
இறுதியாக விஷாலுடன் ஆக்சன் படத்தில் தோன்றியிருந்தார் தமன்னா. முன்னதாக பாகுபலி 1 மற்றும் இரண்டாம் பாகத்தில் இவரது கத்திச்சண்டை மற்றும் கிளாமர் வெகுவாகவே கவர்ந்திருந்தது. இந்நிலையில் சமந்தா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் வைரலானது.
மேலும் செய்திகளுக்கு...வரலாறு படத்தில் மாஸ் காட்டிய அஜித்...நாயகன் சாதனையை புட்டு வைத்த இயக்குனர்
Tamannaah Anxiety speech about heroines in cinema
அந்த நிகழ்ச்சியில் பேசிய தமன்னா, சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது. பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாக கூட யாரும் பார்ப்பதில்லை. கதாநாயகனுக்கு வழங்கப்படும் சம்பளம் கதாநாயகிகளுக்கு வழங்கப்படுவது கிடையாது. சினிமா தோன்றியதில் இருந்தே இந்த நிலை தொடர்கிறது எனக்கு குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...தந்தையின் முத்தத்திற்கு அர்த்தம் சொன்ன கவிஞன்...நா. முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று
Tamannaah Anxiety speech about heroines in cinema
மேலும் பேசிய இவர், கதாநாயகிகள் போஸ்டரில் இடம் பெறுவதே பெரிய விஷயம். படவிழாக்களுக்கு கதாநாயகர்கள் வராமல் இருந்தால் ஒரு காரணம் சொல்வார்கள். அதே வேளை கதாநாயகி வரவில்லை என்றால் இட்டுக்கட்டி பேசுவார்கள். இந்த நிலைமை எப்போது தான் மாறுமோ என ஆதங்கத்துடன் தெரிவித்து இருந்தார்.
Tamannaah Anxiety speech about heroines in cinema
இதற்கிடையே அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் தட்டி விட்டு வருகிறார் தமன்னா. அந்த வகையில் முன்னதாக திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இவர் பச்சை நிற சேலையும் எக்குத்தப்பாக தைத்த பிளவுஸ் அணிந்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...இளம் பெண்ணுடன் காருக்குள் கசமுசா... போலீசிடம் வசமாக சிக்கிய சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா
தற்போது தோள்பட்டையில் நிற்காத மேல் டாப்பும், குட்டை பாவாடையுமாக இவர் கொடுத்துள்ள போட்டோ ஷூட் சமூக வலைதளத்தில் வைரலாக வருகிறது.