வரலாறு படத்தில் மாஸ் காட்டிய அஜித்...நாயகன் சாதனையை புட்டு வைத்த இயக்குனர்

First Published Aug 14, 2022, 3:15 PM IST

இறுதிக்கட்டத்தில் சிவசங்கர் கீழே விழுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும் அப்படி அஜித் விழுகும்போது இவருக்கு ரியலாகவே அடிபட்டுவிட்டதாம்.

Ajithkumar

நடிப்பில் மட்டும் அல்டிமேட் ஸ்டார் அல்ல இவர் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சூடுதல் என பல்துறைகளிலும் கைதேர்ந்தவர்.  அதோடு  அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ட்ரோன் தொடர்பான கல்வியை கற்பித்து ஆசிரியராகவும் இருந்துள்ளார். இவர் தற்போது நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹச் வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்து அஜித் 61 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

AJITHKUMAR

மலையாள நாயகியான மஞ்சுவாரியர் முக்கிய தோற்றத்தில் நடிக்கும் இந்த படம் வங்கி கொள்ளை தொடர்பான கதைகளத்தை கொண்டிருப்பதாகவும் இதில் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் அஜித் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய திட்டத்தில் இணைய உள்ளார் அஜித்குமார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...தந்தையின் முத்தத்திற்கு அர்த்தம் சொன்ன கவிஞன்...நா. முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று

VARALARU

இந்நிலையில் அஜித்தின் சாதனை படங்களில் ஒன்றான வரலாறு படம் குறித்த இயக்குனரின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். தமிழ் அதிரடி திரைப்படமான இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அசின், சுஜாதா, மற்றும் எம்எஸ் பாஸ்கர் என பலரும் நடித்திருந்த இந்த படத்தில் அஜித் மூன்று தோற்றங்ககளில் நடித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...இளம் பெண்ணுடன் காருக்குள் கசமுசா... போலீசிடம் வசமாக சிக்கிய சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா

VARALARU

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபிஸில் பிளாக் பாஸ்டர் அடித்திருந்தது. அந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக வரலாறு சாதனை படைத்திருந்தது. மேலும் இந்த படம் கன்னடம், பர்மிய மொழி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.செய்யப்பட்டது. இந்த படத்தில் தான் மறைந்த பிரபல நடிகை சுஜாதா இறுதியாக நடித்திருந்தார்.

ஊனமுற்ற கோடீஸ்வரனாக சிவசங்கரும், அவரது மகன்கள்  ஜீவா, விஷ்ணு என மூன்று தோற்றத்தில் வந்திருந்தார் அல்டிமேட் ஸ்டார். இதில் சிவசங்கர் பரதநாட்டிய கலைஞர் என்பதால் இவரை பெண்கள் புறக்கணிக்கின்றனர்.  இதற்கிடையே காயத்ரி என்ற பெண்ணை சிவசங்கருக்கு திருமணம் முடிக்க ஏற்பாடு செய்கின்றனர். அந்த பெண்ணோ இவர் பார்ப்பதற்கு பெண் போன்ற தோற்றத்தில் உள்ளார் எனக்கூறி நிராகரிக்கிறார். இதனால் கோபமடையும் சிவசங்கர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்கிறார். இதன் மூலம் இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. ஒரு குழந்தை தாயிடமும் ஒரு குழந்தை தந்தையிடமும் வளர்கிறது. இந்த படம் மிகுந்த பாராட்டுகளை பெற்றிருந்தது.  

VARALARU

சமீபத்தில் இந்த படத்தின் பின்னணி குறித்து பேசி இருந்த கே எஸ் ரவிக்குமார் அஜித்தின் சாதனை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இறுதிக்கட்டத்தில் சிவசங்கர் கீழே விழுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும் அப்படி அஜித் விழுகும்போது இவருக்கு ரியலாகவே அடிபட்டுவிட்டதாம்.  ஏற்கனவே முதுகில் பலமுறை அறுவை சிகிச்சை செய்துள்ள அஜித் குமார் இந்த அடி காரணமாக சிறிது நேரம் அசையாமல் படுத்து இருந்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு... அர்ஜுன் மகளா இது..! பளீச் என தொடை தெரிய போஸ் கொடுத்து இளசுகளை இம்சிக்கும் ஐஸ்வர்யா - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

இதனை பார்த்த படக்குழு பதறிவுள்ளது. பின்னர்  மருத்துவருக்கும் தெரிவிக்கப்பட்ட போது அஜித்துக்கு ஐஸ் க்யூப்களை முது மற்றும் கழுத்திற்கு அடியில் வைக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.  ஆனால் சிறுது நேரத்தில் அஜித் மீண்டும் தனது பழைய நிலைக்குத் திரும்பி  ஷார்ட் ரெடியா என கேட்டுள்ளார். இதை பார்த்த படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.  இந்த விஷயத்தை சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார் இயக்குனர்.

click me!