சிறந்த படத்திற்கான விருதை 2டி நிறுவனம் சார்பாக ஜோதிகா, சிறந்த நடிகைக்கான விருதை அபிராமி பாலமுரளி, சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா, சிறந்த திரைக்கதைக்கான விருதை சுதா கொங்காரா, சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை ஜி.வி பிரகாஷ் பெற்றுக் கொண்டனர். புது தில்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் கைகளால் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.