இயக்குனர்கள் மணிரத்னத்திடமும், பாலாவிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த இவர், மாதவனின் இறுதிச்சுற்று படம் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆனார்.
தற்போது இவர் சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இதுதவிர இயக்குனர் சுதா கொங்கரா சூர்யா மற்றும் சிம்பு ஆகிய இருவருக்கும் கதை சொல்லி ஓகே வாங்கி உள்ளார். இதில் அவர் யார் படத்தை முதலாவதாக இயக்க உள்ளார் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதன்படி முதலாவதாக சூர்யா நடிக்க உள்ள படத்தை தான் சுதா கொங்கரா இயக்க உள்ளதாகவும், அடுத்ததாக சிம்புவின் படத்தை இயக்க இருப்பதாகவும் அவரே விளக்கம் அளித்துள்ளார். சூர்யா - சுதா கூட்டணியில் வெளியான சூரரைப் போற்றுக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்ததால், அவர்கள் அடுத்ததாக இணைய உள்ள படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதையும் படியுங்கள்... உண்மை கதை மையமாக வைத்து எடுக்கப்படும் 'திகில்' படத்தில் நாயகனாக நடிக்கும் பாண்டியராஜன்!