68-வது தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, அவர்களின் மகன் தேவ், மகள் தியா ஆகியோர் கலந்துகொண்டனர். சூர்யா விருது வாங்கும் போது ஜோதிகாவும், ஜோதிகா விருது வாங்கும் போது சூர்யாவும் மாறி மாறி புகைப்படம் எடுத்த தருணம் இணையத்தில் கவனம் ஈர்த்தது.