தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நடிகராக இருக்கும் அஜித், தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், மூன்றாவது முறையாக இணைந்து, 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதத்திற்கு மேல் முடிக்கப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளை எடுப்பதற்காக தற்போது படக்குழு, பாங்காங் சென்றுள்ளது.
பைக் மூலம் உலகை சுற்றி வர வேண்டும் என பிளான் போட்டுள்ள அஜித், இந்த படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து விட்டு மீண்டும் பைக் ரெய்டு செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் தாணுவின் மனைவி 2001-ல் இறந்தபோது, அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் பைக்கில் வந்து ரோட்டில் 4 மணிநேரம் கார்த்திருந்தாராம். அப்போது சிங்கபூரில் வந்து கொண்டிருந்ததாக தாணு கூறியுள்ளார். தன்னுடைய படத்தை தயாரித்த தயாரிப்பாளரின் சோகத்திற்கு ஆறுதல் கூறவும், சோகத்தை பங்கு போட்டு கொள்ளவும் அஜித் செய்த இந்த செயல் நெகிழவைக்கும் விதமாக உள்ளது.