தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை கொடுக்க வேண்டும் என நினைக்கும் முன்னணி நடிகர்கள் மத்தியில், எதார்த்தமான கதையை தேர்வு செய்து நடித்து... சிறந்த நடிகர் என்கிற அடையாளத்தை ரசிகர்கள் மனதில் பதித்துள்ளவர் சூர்யா.
இந்த பொங்கல் பண்டிகையில் சூர்யாவின் திரைப்படம் வெளியாகவில்லை என்றாலும், அவருடைய ரசிகர்கள் தற்போது மதுரையில் ஒட்டி உள்ள போஸ்டர் தான் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படமும் அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படமும் வெளியாக உள்ளது. எனவே இருதரப்பு நடிகர்களின் ரசிகர்களும் நம்பர் ஒன் நம்பர் டூ என அடித்துக்கொள்ளும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.