காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான, நடிகை சோனியா அகர்வால், அந்த படத்தின் இயக்குனரும், பிரபல இயக்குனருமான செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதை தொடர்ந்து வெள்ளித்திரை வாய்ப்புகள் கிடைக்காததால், சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்தி வந்த சோனியா அகர்வால் தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
நிஜத்தில் நம் கண் முன் நடக்கும் பல அமானுஷ்யமான சம்பவங்களுக்கு, உண்மையில் ஏன் எப்படி நடக்கிறது என்பதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. அப்படி நடந்த சில சம்பவங்களின் பாதிப்பில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஹாரர் காமெடியாக இல்லாமல், நம்மை மிரள வைக்கும் மிரட்டலான ஹாரர் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது.
நடிகைகள் ஸ்ம்ருதி வெங்கட், சோனியா அகர்வால் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் நாயகன் பாத்திரத்தில் ரோஷன் நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின், இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இருவரும் மாறுபட்ட முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது. ஹாரர் படக்காதலர்களுக்கு ஒரு அருமையான விருந்தாக இப்படம் இருக்கும். படத்தின் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Samantha Photos: உடல் மெலிந்து போன சமந்தா... சோகம் தள்ளாடும் முகத்துடன் வெளியான லேட்டஸ்ட் போட்டோ!