நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனர்கள் என்றால் அது பாலாவும், ஹரியும் தான். இதில் ஹரி இயக்கத்தில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார் சூர்யா. அவர் இயக்கத்தில் ஆறு, வேல் மற்றும் சிங்கம் படத்தின் 3 பாகங்கள் என மொத்தம் 5 படங்களில் நடித்திருக்கிறார் சூர்யா. இந்த 5 படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள்.
24
அதிலும் குறிப்பாக சூர்யாவை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய படம் என்றால் அது சிங்கம் தான். சூர்யா - ஹரி கூட்டணியில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான இப்படம் பட்டிதொட்டியெங்கும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து 2013-ம் ஆண்டு சிங்கம் படத்தின் 2-ம் பாகம் வெளியானது. முதல் பாகத்தைப்போல் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இப்படம் அந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற சாதனை படைத்தது.
இதையடுத்து 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் கடந்த 2017-ம் ஆண்டு சிங்கம் படத்தின் 3-ம் பாகம் ரிலீசானது. இப்படத்தின் வெற்றிக்கு பின் அருவா படத்திற்காக சூர்யாவும், ஹரியும் இணைந்து பணியாற்ற உள்ளதாக கடந்த 2020-ம் ஆண்டு அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக அப்படத்தை கைவிட்டு விட்டனர்.
44
இந்நிலையில், சூர்யா - ஹரி கூட்டணி தற்போது 5 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஹரி தற்போது சிங்கம் படத்தின் 4-ம் பாகத்திற்கான கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளாராம். தற்போது கைவசம் உள்ள சிறுத்தை சிவா படம், வெற்றிமாறனின் வாடிவாசல் மற்றும் சுதா கொங்கரா படம் ஆகியவற்றை முடித்துவிட்டு சூர்யா சிங்கம் படத்தின் 4-ம் பாகத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.