அங்கு முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி தொடங்கி இருக்கும் கலாச்சார மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது ரஜினியுடன் அவரது மகள் செளந்தர்யாவும் உடன் சென்றிருந்தார். மொத்தம் 4 அடுக்குகளில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள நீடா அம்பானியின் கலாச்சார மையத்தில் 2000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய பிரம்மாண்ட அரங்கம், ஸ்டூடியோ என ஏராளமான வசதிகளும் உள்ளன.