இந்த சூழலில் நேற்று நடிகர் கார்த்தி மற்றும் மூத்த நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள "மெய்யழகன்" திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா, பட குழுவினரை வாழ்த்தி பேசினார். அதன்பிறகு கங்குவா திரைப்படம் குறித்து பேசிய அவர், இது சுமார் இரண்டரை வருட காலம், ஆயிரத்திற்கும் அதிகமான கலைஞர்களுடைய உழைப்பு நிறைந்த ஒரு படைப்பு. "கங்குவா" என்பது ஒரு குழந்தை, அது பிறக்கும் நாளினை, நாம் அனைவரும் நிச்சயம் கொண்டாட வேண்டும். ஆனால் அதே நேரம் போட்டி என்ற ஒன்று இந்த விஷயத்தில் வந்துவிடவே கூடாது.