கத்துக்கிட்ட எல்லாமே போச்சு! ஞாபக மறதியால் அவதிப்படும் நடிகை பானுப்ரியா!

Published : Sep 01, 2024, 07:00 PM IST

இரண்டு வருடங்களாக ஞாபக மறதியால் அவதிப்படுவதாகவும், ஒரு படப்பிடிப்பில் தனது டயலாக்கை நினைவுபடுத்திப் பேசுவதற்குக்கூட சிரமப்பட்டதாகவும் நடிகை பானுப்பிரியா தெரிவித்துள்ளார்.

PREV
17
கத்துக்கிட்ட எல்லாமே போச்சு! ஞாபக மறதியால் அவதிப்படும் நடிகை பானுப்ரியா!

1980களில் தனது அசாத்தியமான நடிப்புத்திறன் மற்றும் வசீகரமான தோற்றத்தால் தென்னிந்தியத் திரைப்படப் பிரியர்களைக் கவர்ந்த நடிகை பானுப்ரியா. ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

27

ஆந்திராவைச் சேர்ந்த இவர் நடிகையாக மட்டுமின்றி திறமையான நடனக் கலைஞராகவும் ஜொலித்தார். நீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், சமீப காலமாக சில படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு தெலுங்கு சேனலுக்கு பேட்டி அளித்த பானுப்ரியா, தனக்கு ஞாபக மறதி அதிகமாகிவிட்டது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

37

இரண்டு வருடங்களாக ஞாபக மறதியால் அவதிப்படுவதாகவும், ஒரு படப்பிடிப்பில் தனது டயலாக்கை நினைவுபடுத்திப் பேசுவதற்குக்கூட சிரமப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். நினைவில் கொள்ளவேண்டிய விஷயங்களை அடிக்கடி மறந்துவிடுவதால் பல சிரமங்களை அனுபவித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

47

நினைவாற்றல் குறைபாடு காரணமாக ஒரு வருடத்தில் இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே நடிக்க முடிகிறது என்று சொல்லி இருக்கிறார். “இப்போதெல்லாம் எனக்கு உடல்நிலை அவ்வளவு சரியில்லை. ஞாபக மறதியால் அவதிப்படுகிறேன். கற்றுக்கொண்ட விஷயங்களை எல்லாம் மறந்துவிடுகிறேன். இனி எனக்கு நடனத்தில் ஆர்வம் இல்லை. வீட்டில்கூட நடனம் பயிற்சி செய்வதில்லை’’ என்று கூறியுள்ளார்.

57

திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசித்து வந்த பானுப்ரியா சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தால், கணவருடன் சண்டை போட்டுவிட்டு இந்தியா திரும்பினார். ஒரு நடனப் பள்ளியைத் திறக்க வேண்டும் என்றும் கனவு கண்டார்.

67

அப்போது, பானுப்ரியா தனது கணவரை விவாகரத்து  செய்துவிட்டதாக வதந்தி பரவியது. இந்தச் சூழலில் அவரது கணவர் ஆதர்ஷ் கவுஷல் திடீரென மணரம் அடைந்ததுவிட்டார். இதனால் மனம் உடைந்த பானுப்ரியாவுக்கு உடல்நிலையும் பலவீனமானது. விவாகரத்து குறித்த செய்தி தவறானது என்றும் பானுப்பிரியா விளக்கம் அளித்தார்.

77

இப்போது வயதான நிலையில் பானுப்ரியா தனது ஒரே மகளுக்காகத்தான் வாழ்ந்து வருகிறார். மகள் அபிநயா இப்போது லண்டனில் படித்து வருகிறார். மகளுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்றும் பேட்டியில் கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories