சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலமானவர் ராஜலட்சுமி. இவரது கணவர் செந்திலும் ஒரு நாட்டுப்புற பாடகர் தான். இவர்கள் இருவரும் ஒரே சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இதில் ராஜலட்சுமி இறுதிப்போட்டி வரை செல்லாவிட்டாலும், செந்தில் பைனல் வரை சென்று டைட்டிலையும் ஜெயித்து அசத்தினார்.
சூப்பர்சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் செந்தில் - ராஜலட்சுமி இருவருக்கும் சினிமாவில் அடுத்தடுத்து பாட வாய்ப்பு கிடைத்து உள்ளது. அந்தவகையில் இவர்கள் இருவரும் சினிமாவில் சேர்ந்து பாடிய முதல் பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம்பெறும் சின்ன மச்சன் என்கிற பாடல் தான். இதையடுத்து சமீபத்தில் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் இடம்பெறும் சாமி சாமி பாடலையும் ராஜலட்சுமி தான் பாடி இருந்தார். இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரல் ஹிட் ஆனது.
இந்த பாடல் சர்ச்சை குறித்து பாடகி ராஜலட்சுமி முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். விருமன் படத்தில் மதுர வீரன் பாடல் தனது குரலில் வெளிவாரததில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என தெரிவித்துள்ள ராஜலட்சுமி. சினிமாவில் இவ்வாறு நடப்பது சகஜம் தான், நான் பாடிய பாட்டு இப்போ அதிதி குரல்ல வெளியாகியிருக்கு அவ்வளவுதான் என கூறி உள்ளார். ஒரு பாடலுக்கு யார் குரல் பொறுத்தமாக இருக்கிறது என்பதை முடிவு செய்வது இசையமைப்பாளர் தான்.