நான் பாடுன பாட்டு அதிதி குரலில் வெளியாகிருக்கு... விருமன் பாடல் சர்ச்சை குறித்து ஓப்பனாக பேசிய ராஜலட்சுமி

Published : Aug 10, 2022, 02:06 PM ISTUpdated : Aug 13, 2022, 02:07 PM IST

Madhura veeran Song : விருமன் படத்தில் இடம்பெறும் மதுரவீரன் என்கிற பாடலை இசையமைப்பாளர் யுவனுடன் முதலில் சேர்ந்து பாடியது ராஜலட்சுமி தான், பின்னர் அந்த பாட்டை அதிதியை பாட வைத்து வெளியிட்டனர்.

PREV
15
நான் பாடுன பாட்டு அதிதி குரலில் வெளியாகிருக்கு... விருமன் பாடல் சர்ச்சை குறித்து ஓப்பனாக பேசிய ராஜலட்சுமி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலமானவர் ராஜலட்சுமி. இவரது கணவர் செந்திலும் ஒரு நாட்டுப்புற பாடகர் தான். இவர்கள் இருவரும் ஒரே சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். இதில் ராஜலட்சுமி இறுதிப்போட்டி வரை செல்லாவிட்டாலும், செந்தில் பைனல் வரை சென்று டைட்டிலையும் ஜெயித்து அசத்தினார்.

25

சூப்பர்சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் செந்தில் - ராஜலட்சுமி இருவருக்கும் சினிமாவில் அடுத்தடுத்து பாட வாய்ப்பு கிடைத்து உள்ளது. அந்தவகையில் இவர்கள் இருவரும் சினிமாவில் சேர்ந்து பாடிய முதல் பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம்பெறும் சின்ன மச்சன் என்கிற பாடல் தான். இதையடுத்து சமீபத்தில் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் இடம்பெறும் சாமி சாமி பாடலையும் ராஜலட்சுமி தான் பாடி இருந்தார். இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரல் ஹிட் ஆனது.

35

இதன்பின்னர் இவருக்கு கிடைத்த மற்றுமொரு பிரம்மாண்ட வாய்ப்பு தான் விருமன் பட வாய்ப்பு. அப்படத்தில் இடம்பெறும் மதுரவீரன் என்கிற பாடலை இசையமைப்பாளர் யுவனுடன் சேர்ந்து பாடியது ராஜலட்சுமி தான். ஆனால் இறுதியில் அப்பாடலை அதிதி ஷங்கரை பாட வைத்து வெளியிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதால் இவ்வாறு வாய்ப்பு வழங்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதையும் படியுங்கள்... ரஜினிகாந்த் பற்றி மாணவர்களுக்கு பாடம் எடுத்த மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்! வைரலாகும் வீடியோ..!

45

இந்த பாடல் சர்ச்சை குறித்து பாடகி ராஜலட்சுமி முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். விருமன் படத்தில் மதுர வீரன் பாடல் தனது குரலில் வெளிவாரததில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என தெரிவித்துள்ள ராஜலட்சுமி. சினிமாவில் இவ்வாறு நடப்பது சகஜம் தான், நான் பாடிய பாட்டு இப்போ அதிதி குரல்ல வெளியாகியிருக்கு அவ்வளவுதான் என கூறி உள்ளார். ஒரு பாடலுக்கு யார் குரல் பொறுத்தமாக இருக்கிறது என்பதை முடிவு செய்வது இசையமைப்பாளர் தான்.

55

அப்படி மதுர வீரன் பாடலுக்கு அதிதியின் குரல் பொறுத்தமாக இருந்ததால் அவரை பாட வைத்துள்ளார்கள். நானும் அவர் பாடியதை கேட்டேன். மிகவும் அருமையாக பாடி இருக்கிறார். சரியான ஆளுக்கு தான் சான்ஸ் கொடுத்திருக்காங்க. இதற்காக அதிதியை விமர்சிப்பதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது” என கூறி உள்ளார் ராஜலட்சுமி.

இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்த ‘விருமன்’... அதுவும் ஒரே நாளில் இத்தனை கோடியா..!

Read more Photos on
click me!

Recommended Stories