வெளிநாடுகளுக்கு சென்று சினிமா சம்பந்தமான படிப்புகளை படித்து திரும்பி இருக்கிற ஜேசன் சஞ்சய், ஏற்கனவே ஒரு சில குறும்படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த சூழலில் பிரபல லைக்கா நறுமணம் தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அவர் பணியாற்றவிருக்கிறார். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சந்தீப் கிசன் நாயகனாக நடிக்க உள்ள நிலையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்திற்கான படபிடிப்பு பணிகளில் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் கமிட்டானது குறித்தும் இந்த திரைப்படத்தின் கதை குறித்தும் விவரித்து இருக்கிறார் இப்படத்தின் நாயகன் சந்தீப் கிசன்.