ப்ரியா பவானி சங்கர் விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக கன்னடத்தில் ஹீரோயினாக நடித்து வந்த சைத்ரா ரெட்டியே தமிழிலும் கதாநாயகி வேடத்தை ஏற்று நடித்தார். இதைத் தொடர்ந்து, ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார்.
ஆனால் சைத்ரா ரெட்டியை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலப்படுத்தியது, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் தான். இந்த தொடர் தான் தற்போது வரை, டி ஆர் பி-யில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதேபோல் சன் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த 'டாப்பு குக்கூ டூப் குக்கூ' நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்திய இவர், இரண்டாவது ரன்னரப்பாக மாறினார்.