ஸ்ரீதேவி மிகவும் திமிர் பிடித்தவர்! மூத்த நடிகையின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

Published : Sep 28, 2024, 03:02 PM ISTUpdated : Sep 28, 2024, 03:03 PM IST

நடிகை ஸ்ரீதேவி மிகவும் திமிராக நடந்து கொள்பவர் என்று மூத்த நடிகை ஜெயப்பிரதா கூறியுள்ளார். இதற்கான காரணம் என்ன? ஸ்ரீதேவி மீது ஜெயப்பிரதாவுக்கு அப்படி ஏன் கோபம்? என்பதை விரிவாக பார்ப்போம்.  

PREV
15
ஸ்ரீதேவி மிகவும் திமிர் பிடித்தவர்! மூத்த நடிகையின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
Actress Sridevi Cinema Carrier:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி, பின்னர் கோலிவுட் திரையுலகில் கதாநாயகியாக மாறிய ஸ்ரீதேவி... மிக குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்தார். பின்னர் பாலிவுட் திரையுலகிலும் நுழைந்து, லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை கைப்பற்றினார். மேலும் இந்திய திரையுலக ரசிகர்களால் 'அதிலோக சுந்தரி' என அழைக்கப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி.
 

25
Srdevi Shocking Death:

அந்த அளவிற்கு ரசிகர்களை தன்னுடைய ஆட்டம், பாட்டம், நடிப்பு மற்றும் அழகால் மயக்கியவர். கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகை ஸ்ரீதேவி, தன்னுடைய 50 வயதில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்றபோது... குளித்து கொண்டிருக்கும் போதே, மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 2018-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர் உயிரிழந்து 6 வருடங்கள் ஆன பின்பும் கூட.. இவருடைய நினைவுகள் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் உள்ளது.

ரஜினியை ஹீரோவாக்க கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை விற்ற நண்பர்! ராஜ் பகதூர் பற்றிய தகவல்கள்!
 

35
Jaya Prada About Sridevi

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள ஸ்ரீதேவி... படக்குழுவினரை மிகவும் சிரம படுத்த கூடிய நடிகை என்றும், சில நடிகர், நடிகைகளிடம் மிகவும் திமிராக நடந்து கொள்பவர் என கூறப்படுகிறது. 

குறிப்பாக சில நடிகைகளை ஸ்ரீதேவி வயதில் மூத்தவராக இருந்தால் கூட மதிக்க மாட்டாராம். இதில் முதலில் சொல்ல வேண்டிய பெயர் ஜெயப்பிரதா. அவரிடம் ஸ்ரீதேவி எந்த நட்புறவும் வைத்துக் கொள்ளவில்லையாம். ஒரு சந்தர்ப்பத்தில் ஜெயப்பிரதா, ஸ்ரீதேவியை மிகவும் திமிர் பிடித்த நடிகை என கூறியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் மட்டுமே ஸ்ரீதேவி ஜெயப்ரதாவிடம் பேசுவாராம்.

45
Jayaprada Interview

மிகவும் நெருக்கமாகவும் தோழியை போல் பழகுவாராம். அதன் பிறகு ஏதேனும் சினிமா விழாக்களில் சந்திக்க நேர்ந்தால் கூட ஜெயப்பிரதாவிடம் முகம் கொடுத்து பேச மாட்டாராம். ஜெயப்பிரதா  ஒரு இடத்தில் அமர்ந்திருந்தால், ஸ்ரீதேவி அவரை விட்டு தூரமாக சென்று வேறு நாற்காலியில் உட்காருவாராம். இப்படி பலரிடமும் ஸ்ரீதேவி நடந்து கொள்வாராம்.

எத்தனை படங்களில் ஒன்றாக நடித்திருந்தாலும், ஒவ்வொரு படத்திற்கும் இயக்குநர் அல்லது தயாரிப்பாளர் யாராவது ஒருவர் வந்து, 'இவர் ஜெயப்பிரதா' என்று ஸ்ரீதேவிக்கு அறிமுகப்படுத்த வேண்டியிருந்ததாம். ஆனால் ஸ்ரீதேவி அவரைப் பார்த்தாலும் பேச மாட்டாராம். இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் ஜெயப்பிரதா கூறியுள்ளார்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் நிகழ்ச்சியால் விஜய் டிவி-யின் 4 முத்தான சீரியல்கள் முடிவுக்கு வருகிறதா?

55
Jaya prada accusation

ஸ்ரீதேவியைப் பற்றி இதுபோன்ற கருத்துக்கள் பல சந்தர்ப்பங்களில் எழுந்துள்ளன. 'பாகுபலி' படத்தில் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதேவியிடம் ராஜமௌலி கேட்டாராம். ஆனால் அவர் மிகவும் திமிராக பதில் சொன்னதோடு, பல கோரிக்கைகளையும் வைத்தாராம். இதனால் ஸ்ரீதேவியை அந்தப் படத்தில் நடிக்க வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சிவகாமி வேடத்தில் ரம்யா கிருஷ்ணாவைப் பார்த்த பிறகு, ஸ்ரீதேவியைத் தேர்ந்தெடுக்காதது நல்லதாகப் போய்விட்டது என்று ராஜமௌலி கூறியதாகக் கூறப்படுகிறது. ஜெயப்பிரதாவுடன் ஸ்ரீதேவிக்கு ஏற்பட்ட மோதல் குறித்து நடிகை ஜெயசுதா கூட ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார். தற்போது இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories