தோனி, இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் 14-வது சீசனில் கூட தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் கோப்பையை வென்றது. இதன்மூலம் அதிகமுறை கோப்பையை வென்ற கேப்டன் என்கிற பட்டியலில் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார். இதுவரை இருவருமே 5 முறை கோப்பையை வென்றுள்ளனர்.