தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா, சமீபகாலமாக படம் இயக்குவதற்கு ரெஸ்ட் விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதில் இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்களுக்கே அதிக மவுசு உள்ளதால், எஸ்.ஜே,சூர்யாவுக்கு தொடர்ந்து வில்லன் வேடங்கள் குவிந்து வருகின்றன.