Published : Sep 10, 2022, 01:18 PM ISTUpdated : Sep 10, 2022, 01:20 PM IST
ஆர்.சி.15 இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 2-வது திரைப்படமாகும், இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் விஜய்யின் நண்பன் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா, சமீபகாலமாக படம் இயக்குவதற்கு ரெஸ்ட் விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதில் இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாக நடிக்கும் படங்களுக்கே அதிக மவுசு உள்ளதால், எஸ்.ஜே,சூர்யாவுக்கு தொடர்ந்து வில்லன் வேடங்கள் குவிந்து வருகின்றன.
24
அந்த வகையில் தற்போது அவருக்கு பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுதான் இயக்குனர் ஷங்கர் இயக்கும் ஆர்.சி.15 திரைப்படம். ராம்சரண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தை வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்க தான் எஸ்.ஜே.சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஆர்.சி.15 திரைப்படம் அரசியல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 2-வது திரைப்படம் இதுவாகும். இவர்கள் இருவரும் ஏற்கனவே விஜய்யின் நண்பன் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.
44
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் எஸ்.ஜே.சூர்யா வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி, அவர் இப்படத்தில் வில்லனாக நடிக்க ரூ.7 கோடி சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுவே அவர் பெறும் அதிகபட்ச சம்பளமாகும். இவர் ஹீரோவாக நடித்த படங்களுக்கு கூட இந்த அளவு சம்பளம் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.