கைவசம் உள்ள மூன்று படங்களை முடித்த பின்னர் இயக்குனர் ஷங்கர், சூர்யாவுடன் கூட்டணி அமைக்க உள்ளாராம். இவர்களது கூட்டணியில் சரித்திர படம் ஒன்று தயாராக உள்ளதாம். அதன்படி மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி எனும் புத்தகத்தை தழுவி இப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணியை சு.வெங்கடேசன் உடன் இணைந்து ஷங்கர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.