முதல் பாடலிலேயே கவனம் ஈர்த்த கபிலனுக்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட அவர், அடுத்தடுத்து ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கவிஞராக வலம் வந்தார். இவர் கமலின் தசவதாரம் படத்தில் ஒரு சிரிய வேடத்தில் நடித்து தன்னுள் உள்ள நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி இருந்தார்.