அவர் பேசியதாவது : “சூர்யாவுக்கு லயோலா கல்லூரியில் பி.காம் படிக்க விண்ணப்பிக்க சென்றபோது இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள். பின்னர் நான் சென்று, பிரின்சிபலை பார்த்து என்ன பிரச்சனை என கேட்டேன். அவர், சிவாஜி கணேசன் பையன் பி.காம் முடிக்காம பாதியிலேயே போயிட்டாரு, இன்னும் இரண்டு பிரபலங்களின் மகன்களும் அதேபோல் படிப்பை பாதியிலேயே விட்டு சென்றுவிட்டார்கள். உங்க பையனும் அதுபோன்று செய்வான் என சொன்னார். இல்ல என் பையன் நிச்சயம் பி.காம் முடிப்பான்னு சொல்லி சீட் வாங்குனேன். ஆனா கடைசி வருஷத்துல நான்கு அரியர் வச்சிருந்தான். டேய் ராஜா மானத்தை வாங்கிடாதடானு சொன்னேன். எப்போடியோ கஷ்டப்பட்டு படிச்சு பி.காம் டிகிரி வாங்கிட்டான் என சிவக்குமார் சொன்னதை கேட்ட சூர்யா, அய்யோ மேடையில் மானத்தை வாங்குறாரே என தலையில் கைவைத்துக் கொண்டார்.
இதையும் படியுங்கள்... ரிலீசுக்கு முன்பே வேட்டையன், கோட் பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய கங்குவா!