அந்த வகையில் தளபதியின் கோட் திரைப்படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், ஒரு விளையாட்டு அரங்கில் பாம் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அப்பொழுது வில்லன் மோகனை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள, ஒரு சரியான ஆளை தளபதி விஜய் தேடிக் கொண்டிருப்பார். அப்பொழுது அங்கே வரும் சிவகார்த்திகேயனிடம், "துப்பாக்கிய புடிங்க சிவா" என்று சொல்லுவார் விஜய்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசும் சிவகார்த்திகேயன்.. "சார் நீங்க வேற ஏதோ முக்கியமான வேலையாக போறீங்க. இனி இதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று பேசிய வசனங்கள் தளபதி விஜய் அரசியலுக்கு செல்வதால், இனி திரை உலகில் "தளபதி" என்று அவருடைய பட்டத்தை சிவகார்த்திகேயன் ஏற்று பயணிக்க உள்ளதாக அவரது ரசிகர்கள் பெரிய அளவில் பேசி வந்தனர். பல பொது இடங்களிலும் சிவகார்த்திகேயனை பாராட்டி அதிலும் குறிப்பாக இந்த வசனத்தை குறிப்பிட்டு பலரும் அவரை பாராட்டிய வருகின்றனர்.