நடிகர், இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கியவர் கங்கை அமரன். இவரது மகன்களான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகிய இருவரும் தற்போது சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். வெங்கட் பிரபு தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சென்னை 28 மூலம் தொடங்கிய இவரது திரைப்பயணம், தற்போது மாநாடு வரை மாஸாக சென்று கொண்டிருக்கிறது.