தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான, ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே சுமார் 12 வருடங்கள் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன், 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ளார். 10 வருடங்களுக்கு மேலாக மிகவும் ஒற்றுமையான நட்சத்திர ஜோடியாக வலம் வந்த சைந்தவி - ஜிவி ஜோடி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தங்களின் விவாகரத்தை அறிவித்தனர். இருவருமே தங்களின் வளர்ச்சிக்காக ஒருமனதோடு இந்த முடிவை எடுப்பதாக அறிவித்தனர்.
ஜிவி-யுடனான விவாகரத்துக்கு பின்னர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ச ரி க ம ப சீசன் 4 நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் சைந்தவி. இந்நிலையில் இவரை பற்றி பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறியுள்ள தகவல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.