திருமணமான ஒரே வாரத்தில்... நடிகை ஹன்சிகா வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

First Published Dec 14, 2022, 10:59 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகாவுக்கு, திருமணமான ஒரே வாரத்தில் அவருடைய அண்ணன் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகி உள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா. அண்மைக்காலமாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில், திடீரென தன்னுடைய திருமணம் குறித்த தகவலை வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
 

அந்த வகையில் தன்னுடைய பிசினஸ் பார்ட்னரும், நீண்ட நாள் நண்பரும், தன்னுடைய தோழியின் முன்னாள் கணவருமான சோஹைல் கதுரியா என்பவரை, திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஹன்சிகா புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாழ்ந்த, முன்டோட அரண்மனையில் மிக பிரமாண்டமாக நடந்தது.

போஸ் கொடுத்து வாரிசுக்கு ப்ரோமோஷன் தேடும் தளபதி! அந்த சம்பவத்தை கூறி... விஜய்யின் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், திரை பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும், இவர்களுடைய திருமணம் ஒளிபரப்பு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படும் நிலையில், திருமணத்திற்கு வருபவர்களுக்கு சில விதிமுறைகளும் விதிக்கப்பட்டிருந்தது.

திருமணம் முடிந்து தற்போது தன்னுடைய மாமியார் வீட்டிற்கு நடிகை ஹன்சிகா சென்றுள்ள நிலையில், அவ்வபோது தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதே போல் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருவதால், தற்போதைக்கு ஹனி மூன் பிளான் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ரெஜினா கசாண்ட்ரா இந்த ஹீரோவை காதலிக்கிறாரா.? பிறந்தநாள் வாழ்ந்தால் வெடித்த புது சர்ச்சை..!
 

இந்நிலையில் இவருடைய திருமண நடந்த போது தன்னுடைய அம்மா மற்றும் சகோதரருடன் மட்டுமே புகைப்படங்களை எடுத்துக் கொண்ட ஹன்சிகா, அவருடைய அண்ணனின் மனைவி முஸ்கான் நான்சியுடன் எடுத்து கொண்ட ஒரு புகைப்படங்கள் கூட வெளியாகவில்லை. ஏன் அவர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என சமூக வலைதளத்திலும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
 

இந்நிலையில் ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆகும் நிலையில், பிரசாந்த் மோத்வானி தன்னுடைய மனைவி முஸ்கான் நான்சியை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறி  நீதிமன்றத்தை அணுகியுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இது எப்படி நடந்தது? ஒரே புகைப்படத்தில் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த விஜய் சேதுபதி!
 

பிரசாந்த் மோத்வானிக்கும், முஸ்கான் நான்சிக்கும், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி திருமணம் நடந்தது. இவர்களுடைய திருமணத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ள நிலையில், பிரிந்து வாழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஹன்சிகாவின் திருமணத்தையும் முஸ்கான் நான்சி புறக்கணித்திருந்தார்.  இதைத் தொடர்ந்து தற்போது இருவரின் விவாகரத்து குறித்து வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

click me!