தொட்டு பேசி அத்துமீறுவார்கள்... கன்னத்தில் அறைவிடலாம்னு தோணும் - சின்னத்திரை சீண்டல்களை தோலுரித்த ஜாக்குலின்

Published : Feb 21, 2023, 12:00 PM IST

ரக்‌ஷன் உடனான காதல் சர்ச்சை மற்றும் சின்னத்திரையில் தான் எதிர்கொண்ட சீண்டல்கள் குறித்து பேட்டி ஒன்றில் மனம்திறந்து பேசி இருக்கிறார் ஜாக்குலின்.

PREV
14
தொட்டு பேசி அத்துமீறுவார்கள்... கன்னத்தில் அறைவிடலாம்னு தோணும் - சின்னத்திரை சீண்டல்களை தோலுரித்த ஜாக்குலின்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக பிரபலமானவர் ஜாக்குலின். இதையடுத்து அவருக்கு சீரியலில் ஹீரோயினாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து தேன்மொழி என்கிற சீரியலில் நடித்து வந்தார் ஜாக்குலின். வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த அந்த சீரியலுக்கு கடந்த ஆண்டு எண்ட் கார்டு போட்டனர். அந்த சீரியல் முடிந்த பின்னர் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட நடிகை ஜாக்குலின் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார்.

24

அவர் சினிமாவில் நடிப்பதற்காகத் தான் இப்படி உடல் எடையை குறைத்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரக்‌ஷன் உடனான காதல் சர்ச்சை மற்றும் சின்னத்திரையில் தான் எதிர்கொண்ட சீண்டல்கள் குறித்து மனம்திறந்து பேசி இருக்கிறார் ஜாக்குலின்.

இதையும் படியுங்கள்... கம்பேக்னா இப்படி இருக்கனும்... பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடி வசூலித்து அதகளப்படுத்திய ஷாருக்கானின் பதான்

34

அதில் அவர் கூறியதாவது : “தொகுப்பாளராக இருக்கும்போது சிறப்பு விருந்தினர்களாக வருபவர்கள் நம்மிடம் கேட்காமலேயே மேலே கைபோடுவார்கள். அவர்கள் தொட்டு பேசும்போது கடுப்பாக இருக்கும். பெரிய பெரிய பிரபலங்கள் எல்லாம் வரும்போது மிகவும் டீசண்டாக நடந்து கொள்வார்கள். ஆனால் தான் ஒரு பெரிய செலிபிரிட்டி என நினைத்துக்கொண்டு ஒரு சிலர் செய்யும் வேலைகளை பார்க்கும் போது ஓங்கி கன்னத்தில் பளார் என அறைவிடலாம்னு தோணும்.

44

ஜாக்குலின் தொகுப்பாளராக இருந்தபோது அவர் ரக்‌ஷனை காதலிப்பதாகவும் அதிகளவில் கிசுகிசுக்களும் பரவி வந்தன. அதுகுறித்தும் பேசி உள்ள ஜாக்குலின், ரக்‌ஷன் தன்னுடைய ஒரு நல்ல நண்பர் என்றும், அவருக்கு கல்யாணம் ஆனதும் தனக்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார். அதோடு ரக்‌ஷனின் மனைவி உடன் இன்றளவும் தான் நன்றாக பழகி வருவதாக கூறி உள்ள ஜாக்குலின், இது போன்ற தேவையற்ற வதந்திகளுக்கு எதற்காக விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் எந்த இடத்திலும் இதுபற்றி பேசாமல் இருந்து வந்ததாக கூறினார்.

இதையும் படியுங்கள்... ஆம்பளைக்கு தான் ருசியா சமைக்கனும்.. பொம்பளைக்கு தயிர்சாதமே போதும்னு சொன்னாங்க - சுஹாசினி பகிர்ந்த ஷாக் சம்பவம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories