எங்கள் வீட்டில் சமையல் செய்வதற்காக வயசான அம்மா ஒருவர் உள்ளார். நானும் அவரும் தான் வீட்டில் சேர்ந்து சமைப்போம். ஒருநாள் மணிரத்னம் வீட்டில் இல்லாத சமயத்தில், அந்த அம்மாவிடம், வாங்க நாம் சேர்ந்து டேஸ்டா ஏதாவது சமைத்து சாப்பிடலாம் என கேட்டேன். சப்பாத்தி குருமா, பருப்பு உசிலி செய்யலாம் என்று சொன்னேன். அதற்கு அவரோ அதெல்லாம் வேண்டாம் என்றார்.