ஒபீனியன் சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது... எரிமலையாய் வெடித்து பேசிய செல்வராகவன்..!

Published : Mar 25, 2026, 11:15 AM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வரும் செல்வராகவன், தன்னைப் பற்றிய ஆன்லைன் ட்ரோல்களுக்கு தன்னுடைய பாணியிலேயே தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

PREV
14
Selvaraghavan fires back at trolls

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனித்த இடம் பிடித்திருக்கும் இயக்குனர் செல்வராகவன், சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு வீடியோ இணையத்தில் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, "உன்னால் முடியாது, உனக்கு திறமை இல்லை என்று கூறுவோருக்கு அப்படிச் சொல்லும் தகுதியே கிடையாது. தங்களிடம் ஆயிரம் குறைகளை மூட்டை கட்டிக்கொண்டு அடுத்தவரை நோகடிப்பவர்களை ஒரு பொருட்டாக மதிக்கவேண்டாம்" என்று நேரடியாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பேசியிருக்கிறார் செல்வராகவன்.

24
செல்வராகவன் பேசியது என்ன?

மனசாட்சியோடு உழைத்தால், லட்சியம் தானே கை கொடுக்கும் என்றும், பிறர் வார்த்தைகளில் சிக்கிக்கொண்டால் வாழ்க்கை தேங்கிவிடும். யாரைப் பற்றியும் ஒபீனியன் சொல்ல யாருக்கும் அருகதை இல்லை என்றும் அவர் பேசியிருக்கிறார். குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அவரது சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், சில நெட்டிசன்கள் அவரை இலக்காக வைத்து கேலி செய்துவந்தனர். இந்த பின்னணியில் பார்க்கும்போது, இந்த வீடியோ அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.

34
செல்வராகவன் சர்ச்சை

செல்வராகவனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில வதந்திகள் சுற்றி வந்தாலும், அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால், அந்த விவகாரத்தை இறுதியாக முடிவுக்கு கொண்டுவர முடியாத நிலையே தொடர்கிறது. செல்வராகவனின் இந்த வார்த்தைகள் திரையுலகை மட்டுமல்ல, சாதாரண மனிதர்களையும் தொட்டிருக்கின்றன. அவர் நடிப்பில் தற்போது மனிதன் தெய்வமாகலாம் என்கிற படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அப்படம் வருகிறா ஏப்ரல் மாதம் 10ந் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

44
செல்வராகவன் கைவசம் உள்ள படங்கள்

இதுதவிர செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. அப்படம் அவரின் கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையையும் எழுதி முடித்துள்ளாராம் செல்வராகவன். அப்படத்தின் ஷூட்டிங்கும் அடுத்த ஆண்டு தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. இப்படி சினிமாவில் பிசியான நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் பயணித்து வருகிறார் செல்வா.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories