கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் ரஜினி, முத்துவேல் பாண்டியன் என்கிற கெத்தான கேரக்டரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இதுதவிர வஸந்த் ரவி, யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இதில் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார் வில்லனாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 65 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. சமீபத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதையும் படியுங்கள்... ‘வாரிசு’க்கு பாசிடிவ் ரிவ்யூ தர ப்ளூ சட்டை மாறனுக்கு ரூ.1 கோடியா..! இதென்னடா புது உருட்டா இருக்கு
அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. ஜெயிலர் பட ஷூட்டிங்கில் மோகன்லால் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர். அந்த புகைப்படத்தில் அவர் ரெட்ரோ லுக்கில் காட்சியளிக்கிறார். இதைப்பார்க்கும் போது அவர் இப்படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்து வருவது போல் தெரிகிறது.