இந்த நிலையில், இராவண கோட்டம் பட ஷூட்டிங்கின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பேசி உள்ளார். அதன்படி சாந்தனு, இராவண கோட்டம் பட ஷூட்டிங்கிற்காக இராமநாதபுரம் அருகே இருக்கும் கிராமத்திற்கு சென்றாராம். அப்போது அங்குள்ள பள்ளிக்கு சென்றபோது, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தனுவை சந்தித்து பேசினாராம். அப்போது உதவியாளரிடம் காபி வாங்கிவரச் சொன்ன அவர், தன்னிடம் காபி கொடுக்கும் முன் உங்க அப்பா என்ன ஆளுங்க என கேட்டார். என்ன இப்படி வெளிப்படையாக ஜாதியை பற்றி கேட்கிறார் என்று அதிர்ச்சியான சாந்தனு, தன் ஜாதி என்ன என்பதை சொன்ன பின்னர் தான் காபி தன் கைக்கு வந்ததாக கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... நிச்சயதார்த்தத்திற்கு பின் சர்வானந்த் திருமணம் நின்று விட்டதா? தீயாய் பரவிய தகவல்... உண்மையை உடைத்த நண்பன்!