நிச்சயதார்த்தத்திற்கு பின் சர்வானந்த் திருமணம் நின்று விட்டதா? தீயாய் பரவிய தகவல்... உண்மையை உடைத்த நண்பன்!

Published : May 16, 2023, 03:12 PM IST

நடிகர் சர்வானந்த், நிச்சயதார்த்தத்திற்கு பின், திருமணத்தை நிறுத்தி  விட்டதாக வெளியாகியுள்ள தகவலைத் தொடர்ந்து, இந்த வதந்தி குறித்து அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார்.  

PREV
15
நிச்சயதார்த்தத்திற்கு பின் சர்வானந்த் திருமணம் நின்று விட்டதா? தீயாய் பரவிய தகவல்... உண்மையை உடைத்த நண்பன்!

தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சர்வானந்த். ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளது மட்டுமின்றி, தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'காதல்னா சும்மா இல்லடா' என்ற படத்தின் மூலம் தமிழ் படங்களில் நடித்த இவர், இதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு வெளியான 'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்ததால் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான சைமா விருதையும் சர்வானந்த் பெற்றார்.

25

அதேபோல் நடிகர் சேரன் இயக்கத்தில் வெளியான, ஜேஜே எனும் நண்பனின் வாழ்க்கை, கணம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வந்ததால்,  தமிழ் படங்களில், அதிகம் கவனம் செலுத்தமுடியவில்லை.

24 மணி நேரமும் செக்ஸ் வேணும்! அவரை விட 10 வயசு சின்னபொண்ணுனு கூட பாக்கல... பொங்கிய சம்யுக்தா!

35

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சர்வானந்திற்கும் அவருடைய நீண்ட நாள் காதலியான ரஷிதா ரெட்டிக்கும் சமீபத்தில், மிக பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு, இவர்களை வாழ்த்தினர். குறிப்பாக நடிகர் சித்தார்த் - ஆதிதிராய் ஜோடி, சிரஞ்சீவி மற்றும் அவரின் மனைவி,  ராம் சரணம் மற்றும் அவரின் மனைவி உபாசனா, ராணா, ஸ்ரீகாந்த் போன்ற பல பிரபலங்கள் இவர்களின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர்.

45

திருமண நிச்சயத்திற்கு பின்னர், விரைவில் இவர்களுடைய திருமண தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்...  பல மாதங்கள் நாட்கள் ஆகியும், தற்போது வரை இவர்களின் திருமண தேதி வெளியாகாமல் உள்ளது. எனவே சர்வானந்த் - ரக்ஷிதா ரெட்டி திருமணம் நின்று விட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் தீயாக பரவியது. இதை அடுத்து சர்வானந்தின் நண்பர் ஒருவர் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிச்சை எடுத்து பொழச்சுக்கோன்னு சொன்னாரு! விஷ்ணுகாந்த் சொல்வது அப்பட்டமான பொய்.. வெளுத்து வாங்கிய சம்யுக்தா!
 

55

இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது, சர்வானந்த் அடுத்ததாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த ஒரு மாதமாக லண்டனில் இருந்த நிலையில், தற்போது தான் இந்தியா வந்துள்ளார். எனவே இனிமேல் தான் குடும்பத்தினருடன் பேசி, திருமண தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்து... இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories