தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி சுப்ரமணியபுரம் என்கிற தரமான படத்தை கொடுத்த சசிகுமார். அதன்பின் படம் இயக்குவதை நிறுத்திவிட்டு முழுநேர நடிகராகிவிட்டார். ஆரம்பத்தில் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களிலேயே அதிகளவில் நடித்து வந்த சசிகுமார், தற்போது வித விதமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த ஒரு படம் தான் அயோத்தி.