Sai Pallavi : நடிகை சாய் பல்லவி நடித்துள்ள கார்கி என்கிற திரைப்படம் வருகிற ஜூலை 15-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிடுகிறது.
பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சாய் பல்லவி, இதையடுத்து தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து, குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவருக்கு தெலுங்கு திரையுலகில் அதிக மவுசு உண்டு, இதனால் அந்த மொழி படங்களில் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை சாய் பல்லவி நடிப்பில் அண்மையில் வெளியான படம் விராட பருவம். இப்படத்தில் அவர் பெண் நக்சலைட்டாக நடித்திருந்தார். இதில் நடிகர் ராணாவுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும், சாய் பல்லவியின் துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
இதனிடையே இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் ஓடிடி ரிலீஸை ஒட்டி, ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ராணாவுடன் கலந்துகொண்டார் சாய் பல்லவி. அப்போது தனது பள்ளிப்பருவத்தில் காதல் கடிதம் எழுதி பெற்றோரிடம் அடிவாங்கிய சம்பவம் குறித்து மனம்திறந்து பேசி உள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : “நான் 7-ம் வகுப்பு படிக்கும் போது, காதல் கடிதம் எழுதி உள்ளேன். என்னுடன் படித்த ஒரு பையனுக்கு அந்த காதல் கடிதத்தை எழுதி இருந்தேன். அறியாத வயதில் அந்த கடிதம் எழுதியதை பார்த்த எனது பெற்றோர், என்னை செம்மத்தியாக அடித்தனர். மற்றபடி வேறு யாருக்கு கடிதம் எழுதியதில்லை” எனக்கூறினார். அவர் நடித்துள்ள கார்கி என்கிற திரைப்படம் வருகிற ஜூலை 15-ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.