ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்தாண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஸ்ரேயா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது போல் தற்போது உலகமெங்கும் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்து வருகிறது இப்படம்.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் இசையும் முக்கிய காரணமாக அமைந்திருந்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்து இருந்தார். அவரது இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வேறலெவலில் ஹிட் அடித்தன. குறிப்பாக அதில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்கிற பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியதோடு, இன்றளவும் அதற்கான மவுசு குறைந்தபாடில்லை.
இதையும் படியுங்கள்... குழந்தைகள் ஹாலிவுட் படம் பார்த்தால் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை... இது எங்க?
இதனிடையே கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருது விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதும் கிடைத்திருந்தது. அதுமட்டுமின்றி உலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழாவின் இறுதி நாமினேஷன் பட்டியலிலும் நாட்டு நாட்டு பாடல் இடம்பெற்று உள்ளது. இந்த பாடலுக்கு விருது கிடைக்க அதிகளவில் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.