வட கொரியா என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது அந்நாட்டு அதிபர் கிம் ஜான் உன் மற்றும் அங்கு நடைபெற்று வரும் சர்வாதிகார ஆட்சியும் தான். வடகொரியா மற்ற நாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகவே திகழ்ந்து வருகிறது. அங்கு ஊடகங்கள் உள்பட அனைத்துமே அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அங்கு பல வினோதமான சட்டங்களும் அவ்வப்போது நிறைவேற்றப்படுவது வழக்கம்.