சினிமா துறையில் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விருது நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திரைப்படங்கள் போட்டியிடும். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை ஆஸ்கர் என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான், ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட இந்தியர்கள் பிற நாட்டு படங்களுக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ளனர்.