குறிப்பாக நேற்று இந்த படத்தின் பிரீமியர் ஷோ பிரபலங்களுக்கு திரையிடப்பட்ட நிலையில், இதனை பார்ப்பதற்காக நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வருகை தந்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் படு வைரல் ஆனது. படத்தைப் பார்த்த பிரபலங்கள், படம் மிகவும் விறுவிறுப்பாக உள்ளதாக தங்களுடைய கருத்தை தெரிவித்தனர். இது ஒரு புறம் இருக்க இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.