ப்ளீஸ்! இனிமே இப்படி பண்ணாதீங்க!'ரோஜா.. ரோஜா..' பாடகர் சத்யன் உருக்கம்! ஏன் என்னாச்சு?

Published : Sep 15, 2025, 03:39 PM IST

ஊடகங்கள் தான் சொல்தை திரித்து போடுவதாக 'ரோஜா.. ரோஜா...' பாடகர் சத்யன் குற்றம்சாட்டியுள்ளார். தான் சொல்லாத விஷயங்களை போட வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

PREV
14
பின்னணி பாடகர் சத்யன்

'காதலர் தினம்' படத்தில் இடம்பெற்ற 'ரோஜா.. ரோஜா...' என்ற பாடலை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. 90 கிட்ஸ்களின் மனதில் இடம்பெற்ற இந்த பாடலை சமீபகாலமாக பட்டிதொட்டியெங்கும் வைரலாக்கி வருவது பின்னணி பாடகர் சத்யன். பல ஆண்டுகளுக்கு முன்பு சத்யன் ஒரு இசை கச்சேரியில் 'ரோஜா.. ரோஜா...' பாடலை பாடும் வீடியோ இணையத்தில் சரமாரியாக வைரலானது.

24
'ரோஜா.. ரோஜா..' புகழ் சத்யன்

இந்த வீடியோ வெளியான பிறகு தான் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு பின்னணி பாடகர் இருந்தாரா? என்பது அனைவருக்கும் தெரியவந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் 150க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய சத்யனின் திறமையை தமிழ் திரையுலகம் கண்டுகொள்ளவே இல்லை. கொரொனாவுக்கு பிறகு பாடும் வாய்ப்பு ஏதும் கிடைக்காததால் ஹோட்டல் வேலைக்கு சென்றதாக சத்யன் வருத்தத்துடன் கூறியிருந்தார்.

சத்யனை திட்டிய ஏ.ஆர்.ரகுமான்

இசையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களான இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தமிழில் திறமையான பின்னணி பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் மலையாளம், தெலுங்கு மொழியை சேர்ந்தவர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுத்ததாக ஒருபக்கம் குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, வாய்ப்பு கேட்டு சென்ற தன்னை ஏ.ஆர்.ரகுமான் திட்டி அனுப்பினார் என்று சத்யன் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

34
ஊடகங்களுக்கு வேண்டுகோள்

தொடர்ந்து சத்யன் பல்வேறு பிரபலமான யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். இந்நிலையில், ஊடகங்கள் தான் சொல்லாத செய்தியை சொன்னதாக போடுவதாக சத்யன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று வீடியோ வெளியிட்ட சத்யன், ''எனக்கு பேரன்பு கொடுத்த உலக மக்கள் அனைவருக்கும் அன்பான நன்றி. ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

குழிதோண்டி புதைக்காதீர்கள்

நான் பேசுவது நிறைய நல்ல விஷயங்களை உள்ளதை உள்ளபடி சொல்லும் அந்த ஊடகங்களுக்கு கிடையாது. சிலர் தன்னுடைய சுயநலத்துக்காக நாம் சொல்லாத விஷயங்களையும், நாம் பகிராத விஷயங்களையும், பகிர்ந்த விஷய்ங்களை வேறு மாதிரி ஒரு டைட்டிலாகவும், ஸ்கீரின் ஷாட் மாதிரியும் போடுகின்றனர். இது இத்தனை வருஷம் உழைப்பினால் முன்னேறிய ஒருவரை குழிதோண்டி புதைக்கிற மாதிரியானது.

44
நல்லது நடக்க ரொம்ப நாளாகும்

ஆகவே தயவு செய்து இந்த மாதிரி வேலைகளை செய்யாதீர்கள் என உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நல்லது நடக்க ரொம்ப நாளாகும். ஆனால் கெட்டது ஒரு செகண்ட்டில் நடந்து விடும். அந்த கெட்டதுக்கு நீங்கள் உறுதுணையாக போக வேண்டாம். ஒரு சின்ன லாயல்டி இருந்தால் போதும். ப்ளீஸ்''என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories